தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று வழங்கப்படும் ஆதிகாலத்தில் பாரததேச மக்கள் வேதமார்க்கத்தினின்றும் முறைதவறாமலிருந்தனர்.
அக்காலத்தில் பரமபுருஷனுடைய பரத்துவதிற்கு எதிரம்புகோத்தவர்கள் எவருமில்லர். சிலகாலத்திற்கு பின் ருத்ரனிடம் பக்ஷபாதமுள்ள சிலர் ருத்ரனுக்கு பெருமைச் சொல்லிப்பாடி வந்தனர். எனினும் கூட பரமபுருஷனுடைய பெருமைகளை ஒளிக்காமல் பேசி வந்தனர். மற்றும் ருத்ரனுக்கு உள்ள தாழ்வுகளை மறைத்து "எல்லாம் ஒன்றுதான்" என்றுகூறி ஆறுதலுமடைந்தனர்.
அக்காலத்தில் பரமபுருஷனுடைய பரத்துவதிற்கு எதிரம்புகோத்தவர்கள் எவருமில்லர். சிலகாலத்திற்கு பின் ருத்ரனிடம் பக்ஷபாதமுள்ள சிலர் ருத்ரனுக்கு பெருமைச் சொல்லிப்பாடி வந்தனர். எனினும் கூட பரமபுருஷனுடைய பெருமைகளை ஒளிக்காமல் பேசி வந்தனர். மற்றும் ருத்ரனுக்கு உள்ள தாழ்வுகளை மறைத்து "எல்லாம் ஒன்றுதான்" என்றுகூறி ஆறுதலுமடைந்தனர்.
உதாரணமாக மகாகவி காளிதாசன் சிறந்தசிவவபக்தனென அவன் எழுதிய மங்களஸ்லோகங்களிலிருந்து அறியலாம். ஆயினும் அவனே ரகுவம்சத்தில் நாராயணபரத்வத்தை ஒளிக்காமல் பேசியுள்ளான். சங்ககாலத்தை பழங்காலமென்று குறித்தால் வள்ளுவர், இளங்கோ, காளிதாஸன் போன்ற கவிகளின் காலத்தை இடைக்காலம் என குறிக்கலாம். தமிழ்நாட்டிலும், வடநாட்டிலுமிருந்த இக்கவிகளும் நாரணனுக்கு தாழ்வுகூறும் கதைகளை
எங்குமே பாடியதில்லை.
எங்குமே பாடியதில்லை.
பரமபுருஷனுடைய உயர்வைக்காட்டும் தசாவதாரக்கதைகள், அவனது ஸ்ருஷ்டி, ஸம்ஹாரங்களைச்செய்வது முதலானவற்றை பாடுமிவர்கள்
அடியார்களுக்கு அருள்செய்யவோ, திருவிளையாடல்களைப் புரியவோ இல்லாது நாராயணனது அவதாரங்களை தாக்கி, அழிப்பது ஒன்றையே குறியாய் கங்கணம் கட்டி ருத்ரன் எடுத்த கங்காள மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, கூர்ம சம்ஹாரமூர்த்தி, வராஹ சம்ஹாரமூர்த்தி போன்ற அவதாரங்களைப்பற்றி
எங்குமே பாடியதில்லை. இவை மட்டுமல்லஅடிமுடிதேடியகதை, கண்ணைப்பிடிங்கி அர்சித்து சக்கரம்பெற்றகதை முதலான
பாஷாண்டப்பொய்புராண கதைகளை
தமிழிலக்கியங்களிலோ,
திருவள்ளுவர், இளங்கோ, போன்ற இடைக்கால புலவர்களினதும் காளிதாஸன் போன்ற இடைக்கால சிவபக்தர்களின் நூல்களிலேயோ சல்லடை போட்டுத்தேடினாலும் கிடைக்காது.
அடியார்களுக்கு அருள்செய்யவோ, திருவிளையாடல்களைப் புரியவோ இல்லாது நாராயணனது அவதாரங்களை தாக்கி, அழிப்பது ஒன்றையே குறியாய் கங்கணம் கட்டி ருத்ரன் எடுத்த கங்காள மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, கூர்ம சம்ஹாரமூர்த்தி, வராஹ சம்ஹாரமூர்த்தி போன்ற அவதாரங்களைப்பற்றி
எங்குமே பாடியதில்லை. இவை மட்டுமல்லஅடிமுடிதேடியகதை, கண்ணைப்பிடிங்கி அர்சித்து சக்கரம்பெற்றகதை முதலான
பாஷாண்டப்பொய்புராண கதைகளை
தமிழிலக்கியங்களிலோ,
திருவள்ளுவர், இளங்கோ, போன்ற இடைக்கால புலவர்களினதும் காளிதாஸன் போன்ற இடைக்கால சிவபக்தர்களின் நூல்களிலேயோ சல்லடை போட்டுத்தேடினாலும் கிடைக்காது.
இவையெல்லாம் சைவ நாயன்மார்களின் பாடல்களில்தான் தலைக் காட்டத் தொடங்கின. இதிலிருந்தே இவை அவர்கள் காலத்தில்தான் புனையப்பட்டது என்பது பாலகர்களுக்கும்
எளிதில் புலனாகும். இவ்வுண்மைகளை
கண்டுபொறாத சில சைவர்கள் சரபக்கதைக்கு பலப்ரமாணம் உண்டு, ஆகையாலது உண்மையென ஆகாசத்தாண்டவமாடுவர். இனியவ்வாட்டத்தை அடக்கி அப்பாஷாண்டக்கதை அநாதரிக்கதக்கது எனக்காட்டுவோம்.
எளிதில் புலனாகும். இவ்வுண்மைகளை
கண்டுபொறாத சில சைவர்கள் சரபக்கதைக்கு பலப்ரமாணம் உண்டு, ஆகையாலது உண்மையென ஆகாசத்தாண்டவமாடுவர். இனியவ்வாட்டத்தை அடக்கி அப்பாஷாண்டக்கதை அநாதரிக்கதக்கது எனக்காட்டுவோம்.
நரசிம்ஹத்தை சரபவுருமான ருத்ரன் கிழித்துக்கொன்ற சரிதம் சிவ, லிங்க, ஸ்கந்தபுராணங்களில் உள்ளது, வைணவரின் புதுக்கதை புராணப்பரமாணம் கூட அற்றதென சில ஏழைச்சைவர் பிதற்றுவார்களெனில் நமது புராணப்ராமணங்களில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
ப்ரஹ்மாண்ட புராணத்தில் அஹோபில மஹாத்மியத்தில் எட்டாம் அத்தியாயத்தில்:
“தத: க்ருத்தோ மஹாகாயோ ந்ருஸிம்ஹோ பீம நி:ஸ்வந:!
ஸஹஸ்ரகரஜைஸ்த்ரஸ்த: தஸ்ய கா
த்ராணி பீடயந்!!
தத: ஸ்புரச்ச டாசோடோ ருத்ரம் ஸரபரூபிணம்!
வ்யதாரயந்நகை ஸ்தீக்ஷ்ணை ஹிரண்ய கசிபும் யதா!!
நிஹதே ஸரபேதஸ்மிந் ரௌத்ரே மது நிகாதிநா!
துஷ்டுவு: புண்டரீகாக்ஷம் தேவா: தேவர்ஷயஸ்ததா!!””
ஸஹஸ்ரகரஜைஸ்த்ரஸ்த: தஸ்ய கா
த்ராணி பீடயந்!!
தத: ஸ்புரச்ச டாசோடோ ருத்ரம் ஸரபரூபிணம்!
வ்யதாரயந்நகை ஸ்தீக்ஷ்ணை ஹிரண்ய கசிபும் யதா!!
நிஹதே ஸரபேதஸ்மிந் ரௌத்ரே மது நிகாதிநா!
துஷ்டுவு: புண்டரீகாக்ஷம் தேவா: தேவர்ஷயஸ்ததா!!””
பொருள்-அதன் பின் நரசிம்ஹர் பிரஹ்மாவை நோக்கி சதுர்முகரே! உண்மையில் நமக்கு கோபம் இல்லை. அந்தந்த காரியம் செய்கிறபோது அதற்கு தக்கபடி கோபம் கொள்கிறோம். தற்போது, சரபம் கொல்லப்பட்டது. ஆகவே என் கோபம் செயற்கையானது.
ஸ்ரீ வராஹ புராணத்தில்:
"ஹந்துமப்யாகதம் ரௌத்ரம் சரபம் நரகேஸரீ!நகைர் விதாரயாமாஸ ஹிரண்ய கசிபும் யதா!!
பொருள்- நரசிம்ஹன் தன்னை கொல்ல வந்த சரபத்தினை ஹிரண்யனைக் கொன்றது போல் நகங்களினால் கிழித்துக் கொன்றார்”
என ஸாத்வீக(பகுதி)புராணங்கள்
சிவ, லிங்க, ஸ்கந்த போன்ற தாமஸபுராணக்கதையை நிரசித்து விட்டன. அடுத்ததாய் நரசிம்ஹத்தை சரபம் கொன்றதை நாயன்மார்கள் பாடல்களில் காணலாம் ஆனால் சரபத்தை நரசிம்ஹம் ஹிம்சித்ததாய் ஆழ்வார்கள் பாடல்களிலில்லை. ஆகவே அது பொய்யென
சில சைவர்கள் வாதம் வைக்கின்றனர்.
என ஸாத்வீக(பகுதி)புராணங்கள்
சிவ, லிங்க, ஸ்கந்த போன்ற தாமஸபுராணக்கதையை நிரசித்து விட்டன. அடுத்ததாய் நரசிம்ஹத்தை சரபம் கொன்றதை நாயன்மார்கள் பாடல்களில் காணலாம் ஆனால் சரபத்தை நரசிம்ஹம் ஹிம்சித்ததாய் ஆழ்வார்கள் பாடல்களிலில்லை. ஆகவே அது பொய்யென
சில சைவர்கள் வாதம் வைக்கின்றனர்.
நாலாயிரம்திவ்யப் பிரபந்தத்தினுற் அவையில்லாதபோதும் ஸ்ரீ இராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வார்
'க்ரீடாவிதே பரிகரஸ தவ யா து மாயா
ஸா மோஹிநீ ந கத்மஸ்ய து ஹந்த ஜந்தோ|
ஹை மாத்யஸிம்ஹவபுஷ்ஸ தவ தேஜஸோமஸே ஸமபுர பவந ஹி ஸலபோ ஸபூவ ||
ஸா மோஹிநீ ந கத்மஸ்ய து ஹந்த ஜந்தோ|
ஹை மாத்யஸிம்ஹவபுஷ்ஸ தவ தேஜஸோமஸே ஸமபுர பவந ஹி ஸலபோ ஸபூவ ||
பொருள்-உனக்கு விளையாட்டுக்கருவியாய், மயக்குகின்ற
மாயையெனும் பிரகிருதி எவனைத்தான் மயக்காது? நரசிம்ஹ உருவங்கொண்ட தேஜஸ்ஸின் ஒரு பகுதியில் சரபவுருக்கொண்ட சிவன் விட்டில்பூச்சி போல பட்டொழிந்தானன்றோ!
மாயையெனும் பிரகிருதி எவனைத்தான் மயக்காது? நரசிம்ஹ உருவங்கொண்ட தேஜஸ்ஸின் ஒரு பகுதியில் சரபவுருக்கொண்ட சிவன் விட்டில்பூச்சி போல பட்டொழிந்தானன்றோ!
அதிமானுஷ்தவத்திலும்(12) அருளிச்செய்தமையால் அவ்வாதமும் உடைக்கப்பட்டுவிட்டது.
இதெற்கெல்லாம் மேலாக சரபம் நரசிம்மத்தை ஹிம்சித்தமை சரபஉபனிஷத்தில் உள்ளது.
ஆனால் சரபத்தை நரசிம்ஹம்
ஹிம்சித்ததாய் ஒருவுபனிஷதுமில்லை என்று ஸாதிப்பர். அதை விளக்குவோமினி.
உபநிஷதங்களுள்
நரசிம்ஹதாபனீய உபநிஷத்தில் நரசிம்மருடைய பெருமைகள் விஷேஷமாக விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 'ம்ருத்யும்ருத்யும'
என்ற மந்திரபதத்தை விவரிக்கும்போது
இதெற்கெல்லாம் மேலாக சரபம் நரசிம்மத்தை ஹிம்சித்தமை சரபஉபனிஷத்தில் உள்ளது.
ஆனால் சரபத்தை நரசிம்ஹம்
ஹிம்சித்ததாய் ஒருவுபனிஷதுமில்லை என்று ஸாதிப்பர். அதை விளக்குவோமினி.
உபநிஷதங்களுள்
நரசிம்ஹதாபனீய உபநிஷத்தில் நரசிம்மருடைய பெருமைகள் விஷேஷமாக விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 'ம்ருத்யும்ருத்யும'
என்ற மந்திரபதத்தை விவரிக்கும்போது
'யஸ்மாத ஸ்வபக்தாநாம ஸம்ருத ஏவ ம்ருத்யும்பமருத யுஞ்ச மாரயதி |தஸ்மாதுசயதே ம்ருத்யுமருதயுமிதி'
தன்னுடைய பக்தர்களால் நினைக்கப்பட்டவுடனேயே ஸம்ஹாரபந்தத்தையும் அகாலமரணத்தையும் அவர்களுக்கு போக்குகின்றாகையால் மிருத்யுவுக்கு மிருத்யுவெனப் படுகின்றான்
என பூர்வதாபினியில் உத்கோஷிக்கப்
பட்டது. உத்தரதாபினியில் இரண்டாவது கண்டத்தில் இறுதியில்
என பூர்வதாபினியில் உத்கோஷிக்கப்
பட்டது. உத்தரதாபினியில் இரண்டாவது கண்டத்தில் இறுதியில்
ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன: ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி
அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய் ஒருவராலும் அவமதிக்க ஒண்ணாதவனாய் ஸர்வேஸ்வரனாய், ஸர்வவியாபியாய் எப்போதும் பிரகாசிப்பவனாய் அஞ்ஞானமும், அதன் காரியமும் அற்றவனாய், ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தைப் போக்குபவனாய், எப்போதும் தனக்கு ஒப்பற்றவனாய், ஆநந்தரூபனாய் எல்லாவற்றுக்கும் இருப்பிடமாய், எப்போதும் உள்ளவனாகவேயிருப்பவனாய் அவித்யையெனப்படும் கருமம், தமோகுணம், மயக்கம் ஆகியவை அற்றவனாயிருப்பவன் இந்த வீரனான நரசிங்கனே!
என உபநிஷத்திலும் பதினெட்டு ஸ்மிருதிகளில் ஒன்றான ஹாரீதஸ்மிருதியில் (1. 2) 'நரசிம்ஹ ஸனாதன' எனவும் பெறப்பட்டது.
இவ்வாக்யங்களால் பக்தர்களின் ஸம்ஹாரபந்தத்தையும், அகாலமரணத்தை போக்குபவனும்
எப்போதும் இருப்பவனாய், எப்போதும் பங்கப்படாதவனாய், தமோகுணம், மயக்கமற்றவாய் என்றும்
உள்ளவனே நரசிம்ஹன் என ஓருபனிஷத் ஓத, அதற்கு வ்ருத்தமாய் அந்தநரசிம்ஹத்தையே சரபம் கொன்றதாக இன்னொருபனிஷத் ஓதுவதை பார்க்கும்போது இது வேதத்திற்கே விழைந்த நிந்தனையாகும். வேதங்களோ, உபனிஷதுக்களோ எப்போதும் முரணாயமையாது என்ற ஞாயத்தால் நிச்சயமாய் இவ்விருவுபனிஷத்துள் ஒன்று பக்ஷபாதத்தாள் செய்யப்பட்ட புனைவாகவே இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டுகொள்வது எனின் காலநிர்ணயத்திலேயாகும். இவ்விருவுபனிஷத்தில் எது சுமார் 500வருடத்துற்கு முற்பட்டதோ, எதை அம்மதஸ்தர்களோ, அல்லது த்ரிமதஸ்தர்களோ கையாண்டுள்ளனரோ அதுவே காலத்தால் முந்தையதாகும். மற்றையது மதாபிமானத்தால் பிற்காலத்தால் செய்யப்பட்ட கற்பிதமெனவும், அறிவுடைய வைதீகர்கள் அதை தள்ளுவதே தக்கதாகும்.
இவ்வாக்யங்களால் பக்தர்களின் ஸம்ஹாரபந்தத்தையும், அகாலமரணத்தை போக்குபவனும்
எப்போதும் இருப்பவனாய், எப்போதும் பங்கப்படாதவனாய், தமோகுணம், மயக்கமற்றவாய் என்றும்
உள்ளவனே நரசிம்ஹன் என ஓருபனிஷத் ஓத, அதற்கு வ்ருத்தமாய் அந்தநரசிம்ஹத்தையே சரபம் கொன்றதாக இன்னொருபனிஷத் ஓதுவதை பார்க்கும்போது இது வேதத்திற்கே விழைந்த நிந்தனையாகும். வேதங்களோ, உபனிஷதுக்களோ எப்போதும் முரணாயமையாது என்ற ஞாயத்தால் நிச்சயமாய் இவ்விருவுபனிஷத்துள் ஒன்று பக்ஷபாதத்தாள் செய்யப்பட்ட புனைவாகவே இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டுகொள்வது எனின் காலநிர்ணயத்திலேயாகும். இவ்விருவுபனிஷத்தில் எது சுமார் 500வருடத்துற்கு முற்பட்டதோ, எதை அம்மதஸ்தர்களோ, அல்லது த்ரிமதஸ்தர்களோ கையாண்டுள்ளனரோ அதுவே காலத்தால் முந்தையதாகும். மற்றையது மதாபிமானத்தால் பிற்காலத்தால் செய்யப்பட்ட கற்பிதமெனவும், அறிவுடைய வைதீகர்கள் அதை தள்ளுவதே தக்கதாகும்.
அதன்படி நாம் மேற்காட்டிய நரசிம்ஹதாபனீயுபநிஷத்து ப்ராசீனாச்சார்யர்களால் பலர் எடுத்தாளப்பட்டதாகும். ஸ்ரீ வேதாந்ததேசிகரால் ஸச்சரிதரக்ஷை முதலிய க்ரந்தங்களிலும் ஆதிசங்கராச்சார்யாரால் 'ம்ருகோ நபீம குசரோ கிரிஷ்டா'எனும் ருக்வேத
வாக்கியத்திலும் ஆதிசங்கராச்யாரால் வ்யாக்யானமும் செய்யப்பெற்றதும் இன்னும் பல மஹாச்சார்யர்கள் இவ்வுபனிஷத்தை கையாண்டுள்ளனர். ஆனால் தற்காலச்சைவர்கள் கூறும் சரபஉபநிஷத்தை சுமார் 500வருடங்களுக்குமுன் அம்மதஸ்தர்களே கையாளவில்லை. எவ்வாறிதைஅடித்துச் சொல்கிறோமெனில் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தசிவாச்சார்யார், அப்பையதீக்ஷதர் போன்றார் சிவபரம்ஸாதிக்க இயற்றிய ஸ்ருதிஸூக்தமாலை, நீலகண்ட பாஷ்யம், சிவதத்துவ விவேகம், சிவார்க்கமணி தீபிகை போன்ற எந்த நூல்களிலும் சைவர்கள் கூறும் 'சரபஉபனிஷத்'தவிற
காலாக்னிருத்ரோபனிஷத்,
தட்சிணாமூர்த்தி, பஞ்சப்பிரம்மம்
ருத்ரஹ்ருதயம், பிருஹஜ்ஜாபாலம்,
பஸ்மஜாபாலம், மண்டலப்பிராம்மணம்,
ஜாபாலம், துரீயாதீதம், பரமஹம்ஸம், போன்ற என்பதற்கும் மேற்பட்ட உபநிஷத்துள் ஒருவாக்யத்தைகூட சல்லடைஇட்டு தேடினும்கிடைக்கவே கிடைக்காது.
வாக்கியத்திலும் ஆதிசங்கராச்யாரால் வ்யாக்யானமும் செய்யப்பெற்றதும் இன்னும் பல மஹாச்சார்யர்கள் இவ்வுபனிஷத்தை கையாண்டுள்ளனர். ஆனால் தற்காலச்சைவர்கள் கூறும் சரபஉபநிஷத்தை சுமார் 500வருடங்களுக்குமுன் அம்மதஸ்தர்களே கையாளவில்லை. எவ்வாறிதைஅடித்துச் சொல்கிறோமெனில் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தசிவாச்சார்யார், அப்பையதீக்ஷதர் போன்றார் சிவபரம்ஸாதிக்க இயற்றிய ஸ்ருதிஸூக்தமாலை, நீலகண்ட பாஷ்யம், சிவதத்துவ விவேகம், சிவார்க்கமணி தீபிகை போன்ற எந்த நூல்களிலும் சைவர்கள் கூறும் 'சரபஉபனிஷத்'தவிற
காலாக்னிருத்ரோபனிஷத்,
தட்சிணாமூர்த்தி, பஞ்சப்பிரம்மம்
ருத்ரஹ்ருதயம், பிருஹஜ்ஜாபாலம்,
பஸ்மஜாபாலம், மண்டலப்பிராம்மணம்,
ஜாபாலம், துரீயாதீதம், பரமஹம்ஸம், போன்ற என்பதற்கும் மேற்பட்ட உபநிஷத்துள் ஒருவாக்யத்தைகூட சல்லடைஇட்டு தேடினும்கிடைக்கவே கிடைக்காது.
மட்டுமில்லாது மஹோபனிஷத், மைத்ராணீயுபநிஷத்
மேல்நாம்கண்ட நரசிம்ஹதாபனீயுபநிஷதுக்களில் பற்பல விஷ்ணுபரமான வாக்யங்களை எடுத்தும் சிவபரமான வாக்யங்களையாங்கு தொடுத்தும் விட்டனர். இதிலிருந்து சைவர்கள் தம்சுயநலத்திற்காக இறைவனளித்த வேதத்தில்கூட திருட்டத்தனம் செய்திருப்பதும்,செய்து கொண்டிருப்பதும், செய்வதும்
புலனாகிறது. ஆகையால் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தர், அப்பையதீக்ஷதர் போன்றோர் சிவனே பரதெய்வம் என பறைசாற்றுவதற்கு ஸ்வேதாஸ்வேதர், மஹோபனிஷத், அதர்வசிரஸ் போன்ற உபநிஷதுக்களை வைத்து முட்டிமோதியதேன்? சிவனே மும்மூர்திகளையும் கடந்த நான்காவது பொருளான பரதெய்வம். விஷ்ணு பஸ்மமணிந்து சிவனடியாராய் இருக்கும் சைவனெனும் சரப, பஜ்மாஜாபல உபநிஷத்தின் ஓரே வாக்யம் போதுமே.பஸ்மம், ருத்ராக்ஷமே வைதிகமெனும் பஜ்மாஜாபலம், பிருஹஜ்மாஜாபலம், காலாக்னிருத்ரம்,ருத்ராக்ஷஜாபல வசனங்களே போதுமானதே. இவற்றிலிருந்து ஓர் வசனமும் அவர்கள் கையாளாததேன்? அவர்கட்கு உபநிஷத்புலமை போதாதென்பரோ? தம்ஸாதகத்திற்காக ஆமாமென்பினும் ஆச்சர்யதக்கதல்ல.
மேல்நாம்கண்ட நரசிம்ஹதாபனீயுபநிஷதுக்களில் பற்பல விஷ்ணுபரமான வாக்யங்களை எடுத்தும் சிவபரமான வாக்யங்களையாங்கு தொடுத்தும் விட்டனர். இதிலிருந்து சைவர்கள் தம்சுயநலத்திற்காக இறைவனளித்த வேதத்தில்கூட திருட்டத்தனம் செய்திருப்பதும்,செய்து கொண்டிருப்பதும், செய்வதும்
புலனாகிறது. ஆகையால் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தர், அப்பையதீக்ஷதர் போன்றோர் சிவனே பரதெய்வம் என பறைசாற்றுவதற்கு ஸ்வேதாஸ்வேதர், மஹோபனிஷத், அதர்வசிரஸ் போன்ற உபநிஷதுக்களை வைத்து முட்டிமோதியதேன்? சிவனே மும்மூர்திகளையும் கடந்த நான்காவது பொருளான பரதெய்வம். விஷ்ணு பஸ்மமணிந்து சிவனடியாராய் இருக்கும் சைவனெனும் சரப, பஜ்மாஜாபல உபநிஷத்தின் ஓரே வாக்யம் போதுமே.பஸ்மம், ருத்ராக்ஷமே வைதிகமெனும் பஜ்மாஜாபலம், பிருஹஜ்மாஜாபலம், காலாக்னிருத்ரம்,ருத்ராக்ஷஜாபல வசனங்களே போதுமானதே. இவற்றிலிருந்து ஓர் வசனமும் அவர்கள் கையாளாததேன்? அவர்கட்கு உபநிஷத்புலமை போதாதென்பரோ? தம்ஸாதகத்திற்காக ஆமாமென்பினும் ஆச்சர்யதக்கதல்ல.
ஆகவேயிதிலிருந்து அச்சைவாச்சார்யர்கள் தம்நூல்களில் சரபம் நரசிம்ஹத்தை கொன்றதை புராணவாயிலாய்ஏற்று
எழுதினார்களேயொழிய அதற்கு வேதப்ரமாணமாக சரபஉபநிஷத்தை கையாளவேயில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷத்து சைவபிரியர்களால் கற்பனையால் வரையப்பட்டதே
என்பது ஸ்பஷ்டம்.
எழுதினார்களேயொழிய அதற்கு வேதப்ரமாணமாக சரபஉபநிஷத்தை கையாளவேயில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷத்து சைவபிரியர்களால் கற்பனையால் வரையப்பட்டதே
என்பது ஸ்பஷ்டம்.
நிற்க! இதுசெய்ததில் திருப்தியுண்டாகாத
சைவர்கள் இச்சரபவிருத்தாந்தத்திற்கு
யஜூர்வேத தைத்ரியஆரண்யகத்தில் மூன்றாம் ப்ரசன்னம் பதினைந்தாம் அனுவாகதொடக்கத்தில்
'ஹரிம் ஹரந்தம்நுயந்தி தேவா|
விஸ்வஸ்யேஸாநாம வ்ருஷபம் மதீநாம||'
என்று வரும் வாக்யத்தை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.இதற்கு அவர்கள் கூறும் பொருளாவது சிங்கவுருவமான ஹரியை ஸம்ஹரிப்பவனும் உலகிற்கு ஈஸ்வரனும் அறிவாளிகளின் தலைவனான சிவனை
தேவர்கள் பின்பற்றுகின்றனர். என்பதாம்.ஆனால் அப்பொருளில் இருதோஷங்கள்
உள்ளன.
சைவர்கள் இச்சரபவிருத்தாந்தத்திற்கு
யஜூர்வேத தைத்ரியஆரண்யகத்தில் மூன்றாம் ப்ரசன்னம் பதினைந்தாம் அனுவாகதொடக்கத்தில்
'ஹரிம் ஹரந்தம்நுயந்தி தேவா|
விஸ்வஸ்யேஸாநாம வ்ருஷபம் மதீநாம||'
என்று வரும் வாக்யத்தை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.இதற்கு அவர்கள் கூறும் பொருளாவது சிங்கவுருவமான ஹரியை ஸம்ஹரிப்பவனும் உலகிற்கு ஈஸ்வரனும் அறிவாளிகளின் தலைவனான சிவனை
தேவர்கள் பின்பற்றுகின்றனர். என்பதாம்.ஆனால் அப்பொருளில் இருதோஷங்கள்
உள்ளன.
முதலாவது தோஷம்-பதங்களை ஸமாநாதி கரணங்களாகக்
(ஒரே வேற்றுமையை உடையவனாகக்)
கொள்ள இடமிருக்கும்போது வ்யதிகரணங்களாகக்
(வெவ்வேறு வேற்றுமையை உடையவனாகக்) கொள்ளுவது நியாயமன்று என்பது வடமொழியிலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நியாயத்தைக் கொண்டு பார்க்கையில் 'ஹரந்தம்'- (பிரமன், ருத்ரன் முதலியனைவரையும்)
ஸம்ஹரிப்பவனும்
'விஸ்வஸ்ய ஈஸாநாம'- உலகிற்கு ஈஸ்வரனும் 'மதீநாப வ்ருஷபம்'- அறிவாளிகளின் தலைவனுமான 'ஹரிம'-ஹரியை, 'தேவா'-தேவர்கள், 'அநுயந்தி-பின்பற்றுகின்றனர் என்று பொருள்கொள்வதே நியாயமென விளங்கும். 'ஹரிம் ஹரந்தம்'என்று ஹரி சப்தத்திற்கு வயுத்பத்திபண்ணிக் கொடுக்கிறப்படி
'ப்ரஹ்மாணமிந்த்ரம ருத்ரம ச யமம வ்ருணமேவ ச|
நிக்ருஹய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோசயதே||'
(ஒரே வேற்றுமையை உடையவனாகக்)
கொள்ள இடமிருக்கும்போது வ்யதிகரணங்களாகக்
(வெவ்வேறு வேற்றுமையை உடையவனாகக்) கொள்ளுவது நியாயமன்று என்பது வடமொழியிலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நியாயத்தைக் கொண்டு பார்க்கையில் 'ஹரந்தம்'- (பிரமன், ருத்ரன் முதலியனைவரையும்)
ஸம்ஹரிப்பவனும்
'விஸ்வஸ்ய ஈஸாநாம'- உலகிற்கு ஈஸ்வரனும் 'மதீநாப வ்ருஷபம்'- அறிவாளிகளின் தலைவனுமான 'ஹரிம'-ஹரியை, 'தேவா'-தேவர்கள், 'அநுயந்தி-பின்பற்றுகின்றனர் என்று பொருள்கொள்வதே நியாயமென விளங்கும். 'ஹரிம் ஹரந்தம்'என்று ஹரி சப்தத்திற்கு வயுத்பத்திபண்ணிக் கொடுக்கிறப்படி
'ப்ரஹ்மாணமிந்த்ரம ருத்ரம ச யமம வ்ருணமேவ ச|
நிக்ருஹய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோசயதே||'
பிரம்மனையும் இந்திரனையும் ருத்ரனையும் யமனையும் வருணனையும்பலாத்கரித்து ஸம்ஹரிக்கின்றனாகையாலே ஹரியென்று கூறப்படுகின்றான். என்னும் ஸுப்ரஸித்தமான நிர்வசனமும்இதை உபப்ருஹ்ணம் செய்கிறது. ஹரிசப்தத்தால் சிங்கப்பிரானை கொள்ள வேண்டுமென்றாலும் 'ஹரந்தம்'-(இரணியனையும் சரபத்தையும்) ஸம்ஹரித்தவனான 'ஹரிம்'-சிங்கப்பிரானை என்று பொருள்கொள்வதே முற்கூறிய நியாயத்திற்கு பொருந்தியது. முன்னெடுத்த நரசிம்ஹதாபனீயம் முதலான வேதவாக்யங்களுக்கும் ஸ்மிருதிவாக்யத்திற்கும்,
ஸாத்வீகபுராண வாக்யங்களுக்கும் இப்பொருளே பொருந்தியிருக்கும். சைவர்கள் கூறும் பொருள் முற்கூறிய நியாயத்திற்கு பொருந்தாததாகையாலும்
முன்னெடுத்து ஸ்ருதி, ஸ்மிருதி, ஸாத்வீகபுராணங்களுக்கு வ்ருத்தமாகையால் எடுத்துக்கழிக்கவும் தக்கதன்று.
ஸாத்வீகபுராண வாக்யங்களுக்கும் இப்பொருளே பொருந்தியிருக்கும். சைவர்கள் கூறும் பொருள் முற்கூறிய நியாயத்திற்கு பொருந்தாததாகையாலும்
முன்னெடுத்து ஸ்ருதி, ஸ்மிருதி, ஸாத்வீகபுராணங்களுக்கு வ்ருத்தமாகையால் எடுத்துக்கழிக்கவும் தக்கதன்று.
இரண்டாவது தோஷம்-இங்கு சிவனை குறிக்கும் பதமோ, சரபத்தை குறிக்கும் பதமோ இல்லை. ஆகவே ஏட்டிக்குப் போட்டியாய் ஏற்பட்ட சரபகதையை இது குறிக்கிறது என்பது பரிஹாசத்திற்கிடமாகும். 'ஈஸாநாம'எனும் பதம் இங்கிருப்பதாலும் ஈஸந சப்தம் சிவனிடத்திலே ரூடியை உடையதாகையாலும் இங்கு சிவநாமம் இருக்கின்றதேயெனில் இங்கு ஈஸாந சப்தம் தனியாக இல்லை. 'விஸ்வஸ்ய ஈஸாநாம்' (உலகிற்கு ஈஸனான) என்று 'விஸ்வஸ்ய' எனும் உபபதத்தோடு கூடியே உள்ளது. ஆகவே ஈஸாந சப்தத்தின் ரூடி பபங்கமடைந்துவிடுகிறது.'ஈஸாந'
சப்தத்தை மாத்திரம் பிரயோகித்தால், சதபதப்ரஹ்மாணாதிகளிலே பாபம் நீங்கப்பெறாதவனாய், காமவஸ்யனாய் ஒதப்படும் சிவனை சொல்கின்றதென எவராவது நினைத்துவிடப்போகிறார்களோ என்றே 'பதிம் விஸ்வஸ்யே ஆதமேஸ்வரம்நாராயணம்'
(உலகிற்குப் பதியாயிருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனுமான நாராயணன்) என்று நாராயணவல்லியில் லோகேஸ்வரனாக ஓதப்பட்ட நாராயணனே இவன் என்று காட்டுப்படுகிறது 'விஸ்வஸ்ய ஈஸாநம' எனும்பதம். ஆகையால் இங்கு சிவநாமம் இருப்பதாக வாதிடுவது பகற்கனவேயாகும். இவ்விரண்டு தோஷங்களாலும் சைவர்
ஏற்றப்பார்க்கும் பொருள் பொருந்தாமல் விபரீதமாய் வைஷ்ணவ ஸாதகமாய் பொருள்பயந்து நின்றது.
சப்தத்தை மாத்திரம் பிரயோகித்தால், சதபதப்ரஹ்மாணாதிகளிலே பாபம் நீங்கப்பெறாதவனாய், காமவஸ்யனாய் ஒதப்படும் சிவனை சொல்கின்றதென எவராவது நினைத்துவிடப்போகிறார்களோ என்றே 'பதிம் விஸ்வஸ்யே ஆதமேஸ்வரம்நாராயணம்'
(உலகிற்குப் பதியாயிருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனுமான நாராயணன்) என்று நாராயணவல்லியில் லோகேஸ்வரனாக ஓதப்பட்ட நாராயணனே இவன் என்று காட்டுப்படுகிறது 'விஸ்வஸ்ய ஈஸாநம' எனும்பதம். ஆகையால் இங்கு சிவநாமம் இருப்பதாக வாதிடுவது பகற்கனவேயாகும். இவ்விரண்டு தோஷங்களாலும் சைவர்
ஏற்றப்பார்க்கும் பொருள் பொருந்தாமல் விபரீதமாய் வைஷ்ணவ ஸாதகமாய் பொருள்பயந்து நின்றது.
எனவே நாம் மேற்கண்ட ப்ரமாணங்கள், விசாரங்கள்மூலம் நரசிம்ஹபிரானின் கால்தூசியசைக்கக் கூட சரபத்தால் அசைக்கவும் முடியாதெனவும், அச்சரபம் நரசிம்ஹத்தை ஹிம்சித்ததாயான
தாமஸ புராணகதைகளும், பொய்யுபனிஷத்தும் நமது
நரசிம்ஹதாபனீயோபநிஷத்,
ஸாத்வீக(பகுதி)புராண வாக்யங்கள் முன் பரிதிகண்டபனிபோல் பட்டொழிந்து போனது.
தாமஸ புராணகதைகளும், பொய்யுபனிஷத்தும் நமது
நரசிம்ஹதாபனீயோபநிஷத்,
ஸாத்வீக(பகுதி)புராண வாக்யங்கள் முன் பரிதிகண்டபனிபோல் பட்டொழிந்து போனது.
அறிவு கெட்ட மூடனே மூதேவி புண்டரத்தை அணிந்து கொண்டு பிறந்து இறந்த பள்ளச்ரேஷ்டனை குருவாகக் கொண்டு விபூதி உருத்திராக்கம் ஆகிய சிவசின்னங்களை இகழந்து வாயா பேசுகிறாய்?
ReplyDeleteஉமது பூர்வாச்சாரியார்கள் அனைவரும் தோல்வியைத் தழுவியும் உனது ஆணவம் அடங்கவில்லையே
முக்திகோபநிடதத்தில் 108 உபநிடதங்களில் ஒன்றாக சரபமும் போற்றப்படுவதை மறந்தனையோ?
அதர்விகைக்கும் அதர்வசிரசுக்கும் இஷ்டம் போல் பொருள் கொண்டு திரியும் பஞ்சமச்ரேஷ்டர்களுக்கு சங்கரரின் பெருமை விளங்குமோ?
ReplyDeleteசங்கரர் கண்ணனுக்கு பிள்ளை வரம் தந்தது.அனுசாஸனம் கூறுமே துரோண பருவத்தில் கிருஷ்ணர் சங்கரனை பார்த்தனோடு கைலையில் சென்று வணங்கி சதருத்ரியம் செபித்தது சொல்லப்பட்டிருக்கிறதே .