Friday, August 18, 2017

சரபேஸ்வர இடம்ப திக்காரம்







தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று வழங்கப்படும் ஆதிகாலத்தில் பாரததேச மக்கள் வேதமார்க்கத்தினின்றும் முறைதவறாமலிருந்தனர்.
அக்காலத்தில் பரமபுருஷனுடைய பரத்துவதிற்கு எதிரம்புகோத்தவர்கள் எவருமில்லர். சிலகாலத்திற்கு பின் ருத்ரனிடம் பக்ஷபாதமுள்ள சிலர் ருத்ரனுக்கு பெருமைச் சொல்லிப்பாடி வந்தனர். எனினும் கூட பரமபுருஷனுடைய பெருமைகளை ஒளிக்காமல் பேசி வந்தனர். மற்றும் ருத்ரனுக்கு உள்ள தாழ்வுகளை மறைத்து "எல்லாம் ஒன்றுதான்" என்றுகூறி ஆறுதலுமடைந்தனர்.
உதாரணமாக மகாகவி காளிதாசன் சிறந்தசிவவபக்தனென அவன் எழுதிய மங்களஸ்லோகங்களிலிருந்து அறியலாம். ஆயினும் அவனே ரகுவம்சத்தில் நாராயணபரத்வத்தை ஒளிக்காமல் பேசியுள்ளான். சங்ககாலத்தை பழங்காலமென்று குறித்தால் வள்ளுவர், இளங்கோ, காளிதாஸன் போன்ற கவிகளின் காலத்தை இடைக்காலம் என குறிக்கலாம். தமிழ்நாட்டிலும்,  வடநாட்டிலுமிருந்த இக்கவிகளும் நாரணனுக்கு தாழ்வுகூறும் கதைகளை
எங்குமே பாடியதில்லை.
பரமபுருஷனுடைய உயர்வைக்காட்டும் தசாவதாரக்கதைகள், அவனது ஸ்ருஷ்டி, ஸம்ஹாரங்களைச்செய்வது முதலானவற்றை பாடுமிவர்கள்
அடியார்களுக்கு அருள்செய்யவோ, திருவிளையாடல்களைப் புரியவோ இல்லாது நாராயணனது அவதாரங்களை தாக்கி, அழிப்பது ஒன்றையே குறியாய் கங்கணம் கட்டி ருத்ரன் எடுத்த கங்காள மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, கூர்ம சம்ஹாரமூர்த்தி, வராஹ சம்ஹாரமூர்த்தி போன்ற அவதாரங்களைப்பற்றி
எங்குமே பாடியதில்லை. இவை மட்டுமல்லஅடிமுடிதேடியகதை, கண்ணைப்பிடிங்கி அர்சித்து சக்கரம்பெற்றகதை முதலான
பாஷாண்டப்பொய்புராண கதைகளை
தமிழிலக்கியங்களிலோ,
திருவள்ளுவர், இளங்கோ, போன்ற இடைக்கால புலவர்களினதும் காளிதாஸன் போன்ற இடைக்கால சிவபக்தர்களின் நூல்களிலேயோ சல்லடை போட்டுத்தேடினாலும் கிடைக்காது.
இவையெல்லாம் சைவ நாயன்மார்களின் பாடல்களில்தான் தலைக் காட்டத் தொடங்கின. இதிலிருந்தே இவை அவர்கள் காலத்தில்தான் புனையப்பட்டது என்பது பாலகர்களுக்கும்
எளிதில் புலனாகும். இவ்வுண்மைகளை
கண்டுபொறாத சில சைவர்கள் சரபக்கதைக்கு பலப்ரமாணம் உண்டு, ஆகையாலது உண்மையென ஆகாசத்தாண்டவமாடுவர். இனியவ்வாட்டத்தை அடக்கி அப்பாஷாண்டக்கதை அநாதரிக்கதக்கது எனக்காட்டுவோம்.
நரசிம்ஹத்தை சரபவுருமான ருத்ரன் கிழித்துக்கொன்ற சரிதம் சிவ, லிங்க, ஸ்கந்தபுராணங்களில் உள்ளது, வைணவரின் புதுக்கதை புராணப்பரமாணம் கூட அற்றதென சில ஏழைச்சைவர் பிதற்றுவார்களெனில் நமது புராணப்ராமணங்களில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
ப்ரஹ்மாண்ட புராணத்தில் அஹோபில மஹாத்மியத்தில் எட்டாம் அத்தியாயத்தில்:
“தத: க்ருத்தோ மஹாகாயோ ந்ருஸிம்ஹோ பீம நி:ஸ்வந:!
ஸஹஸ்ரகரஜைஸ்த்ரஸ்த: தஸ்ய கா
த்ராணி பீடயந்!!
தத: ஸ்புரச்ச டாசோடோ ருத்ரம் ஸரபரூபிணம்!
வ்யதாரயந்நகை ஸ்தீக்ஷ்ணை ஹிரண்ய கசிபும் யதா!!
நிஹதே ஸரபேதஸ்மிந் ரௌத்ரே மது நிகாதிநா!
துஷ்டுவு: புண்டரீகாக்ஷம் தேவா: தேவர்ஷயஸ்ததா!!””
பொருள்-அதன் பின் நரசிம்ஹர் பிரஹ்மாவை நோக்கி சதுர்முகரே! உண்மையில் நமக்கு கோபம் இல்லை. அந்தந்த காரியம் செய்கிறபோது அதற்கு தக்கபடி கோபம் கொள்கிறோம். தற்போது, சரபம் கொல்லப்பட்டது. ஆகவே என் கோபம் செயற்கையானது.
ஸ்ரீ வராஹ புராணத்தில்:
"ஹந்துமப்யாகதம் ரௌத்ரம் சரபம் நரகேஸரீ!நகைர் விதாரயாமாஸ ஹிரண்ய கசிபும் யதா!!
பொருள்- நரசிம்ஹன் தன்னை கொல்ல வந்த சரபத்தினை ஹிரண்யனைக் கொன்றது போல் நகங்களினால் கிழித்துக் கொன்றார்”
  
என ஸாத்வீக(பகுதி)புராணங்கள்
சிவ, லிங்க, ஸ்கந்த போன்ற தாமஸபுராணக்கதையை நிரசித்து விட்டன. அடுத்ததாய் நரசிம்ஹத்தை சரபம் கொன்றதை நாயன்மார்கள் பாடல்களில் காணலாம் ஆனால் சரபத்தை நரசிம்ஹம் ஹிம்சித்ததாய் ஆழ்வார்கள் பாடல்களிலில்லை. ஆகவே அது பொய்யென
சில சைவர்கள் வாதம் வைக்கின்றனர்.
நாலாயிரம்திவ்யப் பிரபந்தத்தினுற் அவையில்லாதபோதும் ஸ்ரீ இராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வார்
'க்ரீடாவிதே பரிகரஸ தவ யா து மாயா
ஸா மோஹிநீ ந கத்மஸ்ய து ஹந்த ஜந்தோ|
ஹை மாத்யஸிம்ஹவபுஷ்ஸ தவ தேஜஸோமஸே ஸமபுர பவந ஹி ஸலபோ ஸபூவ ||
பொருள்-உனக்கு விளையாட்டுக்கருவியாய், மயக்குகின்ற
மாயையெனும் பிரகிருதி எவனைத்தான் மயக்காது? நரசிம்ஹ உருவங்கொண்ட தேஜஸ்ஸின் ஒரு பகுதியில் சரபவுருக்கொண்ட சிவன் விட்டில்பூச்சி போல பட்டொழிந்தானன்றோ!
அதிமானுஷ்தவத்திலும்(12) அருளிச்செய்தமையால் அவ்வாதமும் உடைக்கப்பட்டுவிட்டது.
இதெற்கெல்லாம் மேலாக சரபம் நரசிம்மத்தை ஹிம்சித்தமை சரபஉபனிஷத்தில் உள்ளது.
ஆனால் சரபத்தை நரசிம்ஹம்
ஹிம்சித்ததாய் ஒருவுபனிஷதுமில்லை என்று ஸாதிப்பர். அதை விளக்குவோமினி.
உபநிஷதங்களுள்
நரசிம்ஹதாபனீய உபநிஷத்தில் நரசிம்மருடைய பெருமைகள் விஷேஷமாக விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 'ம்ருத்யும்ருத்யும'
என்ற மந்திரபதத்தை விவரிக்கும்போது
'யஸ்மாத ஸ்வபக்தாநாம ஸம்ருத ஏவ ம்ருத்யும்பமருத யுஞ்ச மாரயதி |தஸ்மாதுசயதே ம்ருத்யுமருதயுமிதி'
தன்னுடைய பக்தர்களால் நினைக்கப்பட்டவுடனேயே ஸம்ஹாரபந்தத்தையும் அகாலமரணத்தையும் அவர்களுக்கு போக்குகின்றாகையால் மிருத்யுவுக்கு மிருத்யுவெனப் படுகின்றான்
என பூர்வதாபினியில் உத்கோஷிக்கப்
பட்டது. உத்தரதாபினியில் இரண்டாவது கண்டத்தில் இறுதியில்
ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன: ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி
அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய் ஒருவராலும் அவமதிக்க ஒண்ணாதவனாய் ஸர்வேஸ்வரனாய், ஸர்வவியாபியாய் எப்போதும் பிரகாசிப்பவனாய் அஞ்ஞானமும், அதன் காரியமும் அற்றவனாய், ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தைப் போக்குபவனாய், எப்போதும் தனக்கு ஒப்பற்றவனாய், ஆநந்தரூபனாய் எல்லாவற்றுக்கும் இருப்பிடமாய்,  எப்போதும் உள்ளவனாகவேயிருப்பவனாய் அவித்யையெனப்படும் கருமம்,  தமோகுணம், மயக்கம் ஆகியவை அற்றவனாயிருப்பவன் இந்த வீரனான நரசிங்கனே! 
என உபநிஷத்திலும் பதினெட்டு ஸ்மிருதிகளில் ஒன்றான ஹாரீதஸ்மிருதியில் (1. 2) 'நரசிம்ஹ ஸனாதன' எனவும் பெறப்பட்டது.
இவ்வாக்யங்களால் பக்தர்களின் ஸம்ஹாரபந்தத்தையும், அகாலமரணத்தை போக்குபவனும்
எப்போதும் இருப்பவனாய், எப்போதும் பங்கப்படாதவனாய், தமோகுணம், மயக்கமற்றவாய் என்றும்
உள்ளவனே நரசிம்ஹன் என ஓருபனிஷத் ஓத, அதற்கு வ்ருத்தமாய் அந்தநரசிம்ஹத்தையே சரபம் கொன்றதாக இன்னொருபனிஷத் ஓதுவதை பார்க்கும்போது இது வேதத்திற்கே விழைந்த நிந்தனையாகும். வேதங்களோ, உபனிஷதுக்களோ எப்போதும் முரணாயமையாது என்ற ஞாயத்தால் நிச்சயமாய் இவ்விருவுபனிஷத்துள் ஒன்று பக்ஷபாதத்தாள் செய்யப்பட்ட புனைவாகவே இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டுகொள்வது எனின் காலநிர்ணயத்திலேயாகும். இவ்விருவுபனிஷத்தில் எது சுமார் 500வருடத்துற்கு முற்பட்டதோ, எதை அம்மதஸ்தர்களோ, அல்லது த்ரிமதஸ்தர்களோ கையாண்டுள்ளனரோ அதுவே காலத்தால் முந்தையதாகும். மற்றையது மதாபிமானத்தால் பிற்காலத்தால் செய்யப்பட்ட கற்பிதமெனவும், அறிவுடைய வைதீகர்கள் அதை தள்ளுவதே தக்கதாகும்.
அதன்படி நாம் மேற்காட்டிய நரசிம்ஹதாபனீயுபநிஷத்து ப்ராசீனாச்சார்யர்களால் பலர் எடுத்தாளப்பட்டதாகும்.  ஸ்ரீ வேதாந்ததேசிகரால் ஸச்சரிதரக்ஷை முதலிய க்ரந்தங்களிலும் ஆதிசங்கராச்சார்யாரால் 'ம்ருகோ நபீம குசரோ கிரிஷ்டா'எனும் ருக்வேத
வாக்கியத்திலும் ஆதிசங்கராச்யாரால் வ்யாக்யானமும் செய்யப்பெற்றதும் இன்னும் பல மஹாச்சார்யர்கள் இவ்வுபனிஷத்தை கையாண்டுள்ளனர். ஆனால் தற்காலச்சைவர்கள் கூறும் சரபஉபநிஷத்தை சுமார் 500வருடங்களுக்குமுன் அம்மதஸ்தர்களே கையாளவில்லை. எவ்வாறிதைஅடித்துச் சொல்கிறோமெனில் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தசிவாச்சார்யார், அப்பையதீக்ஷதர் போன்றார்  சிவபரம்ஸாதிக்க இயற்றிய ஸ்ருதிஸூக்தமாலை, நீலகண்ட பாஷ்யம், சிவதத்துவ விவேகம், சிவார்க்கமணி தீபிகை போன்ற எந்த நூல்களிலும் சைவர்கள் கூறும் 'சரபஉபனிஷத்'தவிற
காலாக்னிருத்ரோபனிஷத்,
தட்சிணாமூர்த்தி, பஞ்சப்பிரம்மம்
ருத்ரஹ்ருதயம், பிருஹஜ்ஜாபாலம்,
பஸ்மஜாபாலம், மண்டலப்பிராம்மணம்,
ஜாபாலம், துரீயாதீதம், பரமஹம்ஸம், போன்ற என்பதற்கும் மேற்பட்ட உபநிஷத்துள் ஒருவாக்யத்தைகூட சல்லடைஇட்டு தேடினும்கிடைக்கவே கிடைக்காது.
மட்டுமில்லாது மஹோபனிஷத், மைத்ராணீயுபநிஷத்
மேல்நாம்கண்ட நரசிம்ஹதாபனீயுபநிஷதுக்களில் பற்பல விஷ்ணுபரமான வாக்யங்களை எடுத்தும் சிவபரமான வாக்யங்களையாங்கு தொடுத்தும் விட்டனர். இதிலிருந்து சைவர்கள் தம்சுயநலத்திற்காக இறைவனளித்த வேதத்தில்கூட திருட்டத்தனம் செய்திருப்பதும்,செய்து கொண்டிருப்பதும், செய்வதும்
புலனாகிறது. ஆகையால் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தர், அப்பையதீக்ஷதர் போன்றோர் சிவனே பரதெய்வம் என பறைசாற்றுவதற்கு ஸ்வேதாஸ்வேதர், மஹோபனிஷத், அதர்வசிரஸ் போன்ற உபநிஷதுக்களை வைத்து முட்டிமோதியதேன்? சிவனே மும்மூர்திகளையும் கடந்த நான்காவது பொருளான பரதெய்வம். விஷ்ணு பஸ்மமணிந்து சிவனடியாராய் இருக்கும் சைவனெனும் சரப, பஜ்மாஜாபல உபநிஷத்தின் ஓரே வாக்யம் போதுமே.பஸ்மம், ருத்ராக்ஷமே வைதிகமெனும் பஜ்மாஜாபலம், பிருஹஜ்மாஜாபலம், காலாக்னிருத்ரம்,ருத்ராக்ஷஜாபல வசனங்களே போதுமானதே. இவற்றிலிருந்து ஓர் வசனமும் அவர்கள் கையாளாததேன்? அவர்கட்கு உபநிஷத்புலமை போதாதென்பரோ? தம்ஸாதகத்திற்காக ஆமாமென்பினும் ஆச்சர்யதக்கதல்ல.
ஆகவேயிதிலிருந்து அச்சைவாச்சார்யர்கள் தம்நூல்களில் சரபம் நரசிம்ஹத்தை கொன்றதை புராணவாயிலாய்ஏற்று
எழுதினார்களேயொழிய அதற்கு வேதப்ரமாணமாக சரபஉபநிஷத்தை கையாளவேயில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷத்து சைவபிரியர்களால் கற்பனையால் வரையப்பட்டதே
என்பது ஸ்பஷ்டம்.
நிற்க! இதுசெய்ததில் திருப்தியுண்டாகாத
சைவர்கள் இச்சரபவிருத்தாந்தத்திற்கு
யஜூர்வேத தைத்ரியஆரண்யகத்தில் மூன்றாம் ப்ரசன்னம் பதினைந்தாம் அனுவாகதொடக்கத்தில்
'ஹரிம் ஹரந்தம்நுயந்தி தேவா|
விஸ்வஸ்யேஸாநாம வ்ருஷபம் மதீநாம||'
என்று வரும் வாக்யத்தை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.இதற்கு அவர்கள் கூறும் பொருளாவது சிங்கவுருவமான ஹரியை ஸம்ஹரிப்பவனும் உலகிற்கு ஈஸ்வரனும் அறிவாளிகளின் தலைவனான சிவனை
தேவர்கள் பின்பற்றுகின்றனர். என்பதாம்.ஆனால் அப்பொருளில் இருதோஷங்கள்
உள்ளன.
முதலாவது தோஷம்-பதங்களை ஸமாநாதி கரணங்களாகக்
(ஒரே வேற்றுமையை உடையவனாகக்)
கொள்ள இடமிருக்கும்போது வ்யதிகரணங்களாகக்
(வெவ்வேறு வேற்றுமையை உடையவனாகக்) கொள்ளுவது நியாயமன்று என்பது வடமொழியிலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நியாயத்தைக் கொண்டு பார்க்கையில் 'ஹரந்தம்'- (பிரமன், ருத்ரன் முதலியனைவரையும்)
ஸம்ஹரிப்பவனும்
'விஸ்வஸ்ய ஈஸாநாம'- உலகிற்கு ஈஸ்வரனும் 'மதீநாப வ்ருஷபம்'- அறிவாளிகளின் தலைவனுமான 'ஹரிம'-ஹரியை, 'தேவா'-தேவர்கள், 'அநுயந்தி-பின்பற்றுகின்றனர் என்று பொருள்கொள்வதே நியாயமென விளங்கும். 'ஹரிம் ஹரந்தம்'என்று ஹரி சப்தத்திற்கு வயுத்பத்திபண்ணிக் கொடுக்கிறப்படி
'ப்ரஹ்மாணமிந்த்ரம ருத்ரம ச யமம வ்ருணமேவ ச|
நிக்ருஹய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோசயதே||'
பிரம்மனையும் இந்திரனையும் ருத்ரனையும் யமனையும் வருணனையும்பலாத்கரித்து ஸம்ஹரிக்கின்றனாகையாலே ஹரியென்று கூறப்படுகின்றான். என்னும் ஸுப்ரஸித்தமான நிர்வசனமும்இதை உபப்ருஹ்ணம் செய்கிறது. ஹரிசப்தத்தால் சிங்கப்பிரானை கொள்ள வேண்டுமென்றாலும் 'ஹரந்தம்'-(இரணியனையும் சரபத்தையும்) ஸம்ஹரித்தவனான 'ஹரிம்'-சிங்கப்பிரானை என்று பொருள்கொள்வதே முற்கூறிய நியாயத்திற்கு பொருந்தியது. முன்னெடுத்த நரசிம்ஹதாபனீயம் முதலான வேதவாக்யங்களுக்கும் ஸ்மிருதிவாக்யத்திற்கும்,
ஸாத்வீகபுராண வாக்யங்களுக்கும் இப்பொருளே பொருந்தியிருக்கும். சைவர்கள் கூறும் பொருள் முற்கூறிய நியாயத்திற்கு பொருந்தாததாகையாலும்
முன்னெடுத்து ஸ்ருதி, ஸ்மிருதி, ஸாத்வீகபுராணங்களுக்கு வ்ருத்தமாகையால் எடுத்துக்கழிக்கவும் தக்கதன்று.
இரண்டாவது தோஷம்-இங்கு சிவனை குறிக்கும் பதமோ, சரபத்தை குறிக்கும் பதமோ இல்லை. ஆகவே ஏட்டிக்குப் போட்டியாய் ஏற்பட்ட சரபகதையை இது குறிக்கிறது என்பது பரிஹாசத்திற்கிடமாகும். 'ஈஸாநாம'எனும் பதம் இங்கிருப்பதாலும் ஈஸந சப்தம் சிவனிடத்திலே ரூடியை உடையதாகையாலும் இங்கு சிவநாமம் இருக்கின்றதேயெனில் இங்கு ஈஸாந சப்தம் தனியாக இல்லை. 'விஸ்வஸ்ய ஈஸாநாம்' (உலகிற்கு ஈஸனான) என்று 'விஸ்வஸ்ய' எனும் உபபதத்தோடு கூடியே உள்ளது. ஆகவே ஈஸாந சப்தத்தின் ரூடி பபங்கமடைந்துவிடுகிறது.'ஈஸாந'
சப்தத்தை மாத்திரம் பிரயோகித்தால், சதபதப்ரஹ்மாணாதிகளிலே பாபம் நீங்கப்பெறாதவனாய், காமவஸ்யனாய் ஒதப்படும் சிவனை சொல்கின்றதென எவராவது நினைத்துவிடப்போகிறார்களோ என்றே 'பதிம் விஸ்வஸ்யே ஆதமேஸ்வரம்நாராயணம்'
(உலகிற்குப் பதியாயிருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனுமான நாராயணன்) என்று நாராயணவல்லியில் லோகேஸ்வரனாக ஓதப்பட்ட நாராயணனே இவன் என்று காட்டுப்படுகிறது 'விஸ்வஸ்ய ஈஸாநம' எனும்பதம். ஆகையால் இங்கு சிவநாமம் இருப்பதாக வாதிடுவது பகற்கனவேயாகும். இவ்விரண்டு தோஷங்களாலும் சைவர்
ஏற்றப்பார்க்கும் பொருள் பொருந்தாமல் விபரீதமாய் வைஷ்ணவ ஸாதகமாய் பொருள்பயந்து நின்றது.
எனவே நாம் மேற்கண்ட ப்ரமாணங்கள்,  விசாரங்கள்மூலம் நரசிம்ஹபிரானின் கால்தூசியசைக்கக் கூட சரபத்தால் அசைக்கவும் முடியாதெனவும், அச்சரபம் நரசிம்ஹத்தை ஹிம்சித்ததாயான
தாமஸ புராணகதைகளும், பொய்யுபனிஷத்தும் நமது
நரசிம்ஹதாபனீயோபநிஷத்,
ஸாத்வீக(பகுதி)புராண வாக்யங்கள் முன் பரிதிகண்டபனிபோல் பட்டொழிந்து போனது.

Tuesday, August 15, 2017

அரபிதேசமும் ஹிந்துமத வாசமும்

அரபு தேசத்தில் முகமது நபி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரபு தேசத்தில் வாழ்ந்தவர்கள் ஹிந்துக்களை மிகவும் மரியாதையுடன் கௌரவத்துடன் போற்றி வந்துள்ளனர். அரபு நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில அரபியக் கவிஞர்கள் மாநாடு நடைபெறும். மிக சிறந்த கவிதை தங்க தட்டில் பொறிக்கப்பட்டு இந்த மாநாட்டில் வைக்கப்படும் பின்பு இது மெக்காவில் உள்ள காபாவிற்கு பார்வைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வைக்கப்படும். இந்த ஆலயம் மக்கேசுவரம் என்று வரலாற்றில் அறியப்பட்டது. மஹேஸ்வரன் என்பது சிவநாமங்களில் ஒன்று என்பது நமக்கு தெரியும்.

காபா சிவாலயத்தை முகமது நபி கைப்பற்றிய பின்னால் அந்த ஆலயத்தில் இருந்த விக்ரஹங்களை உடைக்கவும் அங்கிருந்த விலைமதிப்பற்ற பல நல்ல நூல்களையும் எரிக்கவும் செய்தார். ஆனால் சில அரபு கவிஞர்கள் அவரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டதால் ஒரு சில பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கவிதைகள் எரிக்கப்படாமல் விடப்பட்டன.
பின்னர் வந்த கலஃபா ஹருன் அல் ரஷீத்” எரிக்கப்படாமல் விடப்பட்டக் கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல் ”ஸைஅகுல்” எனப் பெயரிடப்பட்டது. இந்த நூலில் பகவான் மஹாதேவர் (சுவன்) ஹிந்து விக்ரமாதித்யா போன்ற சொற்கள் மிகவும் மரியாதையுடன் பக்தியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூல் இஸ்தான்புல் (டர்கி) அரசு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நூலில் மிகவும் குறிப்பிடதக்க ஒரு கவிதை உள்ளது. இதை இயற்றியவர் முகமத நபிக்கு பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த ”லபிபின் அகதப் பின் துர்பா” என்ற கவிஞர் ஆவார். அந்த கவிதை –

அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன் ஹிந்தேவ
அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன் (1)
வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ அக அதுன் ஜிகரா
வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன் ஹிந்த்துன் (2)
யே குலுநல்லஹா ய அஹஜல் அரஜ அல்லமின் குல்லஹம்
ஃபட்டப்யூ ஜிகரதுல் வத ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3)
வா ஹோவ அல முஜ்ஜம் வாலயஜுரா மெஹல்லஹே தன ஜிலானா
ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன் யோபஸ்ஸேரியோ நஜதுன் (4)
வா இஸனேன் ஹுமாரிக் அதர் நாயிஹின்கா அகாவதுன் !
வா அஸ்நத ஆல ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5)

(ஸை அருல் அகில் பக் – 157)

இதன் அர்த்தம்- புனித ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி ! ஏனெனில் இறைவன் தன் பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான்.
ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின் நான்கு திசைகளிலும் நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றன.
தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான்.
அறிவு களஞ்சியமான யஜுர் சாமம் ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம். ஆகையால் சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம் செய்வீர். அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை.
ரிக் அதர்வணம் ஆகிய இருவேதங்களும் சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த வேதங்களால் தெளிவடைந்த யாரும் இருளை நோக்கித் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.
முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.
(ஆதார புத்தகம் – ஹிந்து ஹிந்துவத்துவம் ஹிந்துராஷ்ட்ரம்-ஆர்.பி.வி.எஸ்.மணியன் )

முகமது நபியின் பெரியப்பா ஓமர் பின் ஹாஸம் ஒரு கவிஞர் ஆவார். அவரது கவிதைகளில் ஹிந்த் மற்றும் ஹிந்துக்களைப் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. மக்கள் அவரை ”அபுல் ஹகீம்” என்று மரியாதையோடு அழைத்தனர். இதற்குப் பொருள் “அறிவின் தந்தை” என்பதாகும். சில வக்கிரக புத்தி கொண்ட முஸ்லீம்கள் அவரை ”அபுல் ஜிஹல்” என்று அழைத்தனர். இதன் பொருள் ”அறியாமையின் தந்தை” என்பதாகும். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் அவரை முஸ்லீம்கள் வெறுத்தனர்.
இஸ்லாமிய ஜிஹாத் போர் ஒன்றில் இந்த சிவ பக்தர் கொல்லப்பட்டார் !
”ஸை அருல் அகுல்” என்ற கவிதைத் தொகுப்பில் காணப்படும் இவரது கவிதை ஒன்று

கஃபாவிக் ஜிகராமின் அலூமின் தப் அஸேரூ
கலூபன் அமத்தூல் ஹவா வ தஜக்கரூ (1)
வமத் ஜகேரிஹா ஊதன் எல்லா வத ஏ தில்வரா
வலுகயானே ஜாத் அல்லாஹ் ஹே யௌம தப் அஸேரூ (2)
வ அஹலோல்லாஹ் ஜெஹ் அரம்மன் மஹாதேவ ஓ
மனாஜில் இலமுத்தினே மினஹம வஸயதுரூ (3)
வ ஸஹவீ கேயாம் ஃபீ மகாமில் ஹிந்தே யௌமன்
வயகூலன் லாதஹஜன் ஃப இத்ரக் தவஜ்ஜரூ (4)
மஅஸ்ஸயரே அகலாகுன் ஹஸனன் குல்லஹும் (5)
நஜமுன் அஜாஅத் ஹும்ம காபூல் ஹிந்து (6)

இதன் பொருள் வருமாறு –
எந்த மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் பாபச் செயல்களிலும் அதர்மத்திலும் கழித்துவிட்டானோ காம குரோதச் செயல்களால் வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு விட்டானோ அவன் பச்சாதாபத்தோடு வாழ்வின் இறுதியில் நல்ல வழியில வர விரம்பினால் அவனுக்கு அது சாத்தியமாகுமா?
சாத்தியமாகும் !!!!!!!!!
அத்தகையவன் வாழ்வில் ஒருமுறை மனப்பூர்வமாக ஹ்ருதய சுத்தியோடு சிவனை தியானித்தால் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைவது உறுதி.
ஓ இறைவா ! என் வாழ்நாள் முழுவதையும் நீ எடுத்துக்கொண்டு – எனக்கு ஹிந்து தேசத்தில் ஒரே ஒரு நாள் ஜீவிக்க அருள் புரிவாய். ஏன்னெல் அந்த மண்ணை அடைந்தவுடன் மனிதன் ஜீவன் முக்தனாவது நிச்சயம்.
அந்த தேசத்தில (ஹிந்து தேசம்) யாத்திரை மேற்கொள்வதால் அனைத்துப் புண்ணிய கர்மாக்களின் பலனையும் ஒருவன் அடைவதோடு ஹிந்து மஹாபுருஷர்களின் சத்ஸங்கமும் கிடைத்து விடுகிறது.
தில்லி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் (பிர்லா மந்திர) கீதா வாடிகாவில் மேலே கண்ட இரண்டு அரபுக் கவிதைகளும் அவற்றின் அர்த்தத்தோடு பொறிக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவ ஆகாரலக்ஷணம்

       ||ஸ்ரீ மதே இராமானுஜாய நம||

வைஷ்ணவர்கள் சதாசாபரர்களாக ஒழுக வேண்டியஆசாரம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய  ஞானேந்திரியங்கள் ஐந்தும்
வாக், பாத, பாணி, பாயு , உபஸ்தம் ஆகிய காமேந்திரியங்கள் ஐந்தும் மனம் ஒன்றுமாகிற பதினொரு
இந்திரியங்களின் சுத்தியையும் சரீர, ஆத்ம சுத்தியையும் அனுஷ்டித்தலேயாம்.

இவ்வனுஷ்டானம் முற்றிலும் சீர்குழைந்து கிடப்பதுஆகாரத்தில்தான்.  வைஷ்ணவ அந்தணர்களில் கூட இன்று அதை கடைபிடிக்க தவறுகின்றனர். பகவானுக்கு படைக்காமல் உண்ணுகிற உணவு மலத்திற்கு சமம் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. இன்று சந்தையில் விற்கும் கண்ட கண்ட பண்டங்களை புசிக்கின்றனர். அவை அசைவ பதார்தங்கள் என அறிந்தபோதிலும் அலட்சியம். அதிலும் இன்று பிறந்தநாள் என்றால் கேக் வெட்டியும் உண்கின்றனர். இவையெல்லாவற்றையும் செய்துகொண்டு வைஷ்ணவன் என கூறிக்கொள்வது அபசாரத்திலும் அபசாரம். ஆகவே ஆகாரநியதிகளை வலியுறுத்தவே இப்பதிவாம்.

பதார்தங்களின் ஒவ்வொரு பதார்த்தமும் ஒவ்வொரு குணமுண்டு என வைத்ய சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு சாத்வீக, ராஜஸ, தாமஸமெனும் மூவகை உணவுகளுள் தாமஸஉணவை தவிர்த்து
ராஜஸஉணவை சுருக்கி, சாத்வீக உணவை வைஷ்ணவம் புசிக்க வேண்டும். மற்றும் உணவு மூன்று வகையான தோஷங்களை உடையது. அவை ஜாதிதுஷ்டம்(உருவாக்கத்திலேயே குற்றமுடையவை), ஆசரய துஷ்டம்(பிறருடைய சம்பந்தத்தில் குற்றமுடையவை), நிமித்த துஷ்டம் ஆகிய மூன்றுமாம்(ஏதேனும் காரணத்தால் வந்த குற்றமுடையவை)
                           
மாம்சவகைகள், மதுபானம், வெங்காயம்,வெள்ளைபூண்டு, முருங்கை போன்ற உணவுகள் ஜாதிதுஷ்டம். அவை தாமஸமாகையால் அறவே நீக்கபட வேண்டியவை.  சண்டாளர், மிலேச்சர், துர்போக்கினர் இலவசமாக தந்த உணவு ஆசர்யதுஷ்டம்.
இவையும் தாமஸமே ஆகையால் நீக்கப்படவேண்டியவை. பிணசோறு, சிரார்த்த சோறு போன்றவையும் மயிர், புழு, எச்சில் பட்டவையும் நிமித்ததுஷ்டம். இவையும் தாமஸமே;அரவே ஒழிக்கபடவேண்டியவை.

புளி,மிளகாய்,புழுங்கரிசி,
எருமையின் பால், தயிர், நெய் முதலிய ராஜஸ உணவுகள். இவற்றை இயன்றவரை குறைக்க வேண்டும்.
சாத்விமமும், ராஜஸமும் கலந்த உணவான பாகல், வெண்டை, சுண்டை, அவரை, மா, பலா, நல்லகத்தரி, பரங்கி, பூசணி, கொத்தவரை முதலான காய்களும், வாழையின் காய், பூ, தண்டும், சேம்பு, கருணைக்கிழங்கு, கீரைத்தண்டு, அகத்தி, தூதுவளை, பொன்னாங்கண்ணி
அறுகீரை, முளைக்கீரை முதலிய கீரைகளும் புசிக்கதக்கவை.

 
இனிமை கண்டு வயிறு புடைக்க தின்னாமல் பகவத் ப்ரசாதம் என்ற ப்ரதிபத்யோடு மிதமாக புசித்தல் உசிதம்.
முக்கியமாக பகவானுக்கு படைப்பது அவசியம். அவை பல தோஷங்கள் இருப்பதால் அதை நீங்கபன்ன போஜனத்துக்கு முன் நாராயணபூஜை செய்வது சாலபொருந்ததக்கதாம். முடியாதவர்கள் "சர்வம் கிருஷ்ணார்பனம்" போன்ற நாமத்தை கூறி மனத்தாலே பகவானுக்கு படைத்து
உண்ணுதல் வேண்டும்.இவ்வாசாரத்தை ஒழுகி உண்ணலே போஜனமாம். இதை கடைபிடிப்பவனே வைஷ்ணவனாம்.

     
        சர்வம் கிருஷ்ணார்பணம்

கிறீஸ்தவ பாஷாண்டவாத மறுப்பு

தாயப்பன், சாதுசெல்லப்பா என்ற சில கிறுக்கு கிறீஸ்தவர்கள் நமது புனிதமான வேதங்களில் இயேசுபற்றி இருப்பதாகவும், இயேசுவையே வணங்கவேண்டும் என்றெல்லாம் பேசி இந்துக்களை குழப்பும் நோக்கில் உரையாடல்கள், குறும்படம் எடுத்து கிறீஸ்தவத்தை பரப்ப நினைக்கும் குறுக்குவேலையில் ஈடுபட்டும் குள்ளநரிகள் ஆவர்.
இதை நம்பிய சில கிறீஸ்தவ ஊழியர்கள் இதை நம்மிடம் பரப்பி அவர்களின் நோக்கிற்கு எம்மை பலியாக்குகின்றனர். எனவே இது பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இருந்தால்தான் இப்புல்லுருவிகளிற்கு தக்க பதிலடிகள் கொடுக்கலாம். அதன் பொருட்டு 2012-10-6 அன்று தனிமனித ராணுவம்,நாராயண அஸ்திரம் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணமாச்சார்யரால் வெளியிடப்பட்ட "பாஞ்சஜன்யம்" பத்ரிகையில் எழுந்த மறுப்புவிஷயங்களை இங்கே பதிவிடுகிறேன்.
வேதத்தில் கூறப்பட்ட "பிரஜாபதி"தான் இயேசு என்பதே இவர்களின் அடிப்படை வாதம். இதற்கென தனி அமைப்பே செயல்படுகிறது. "பிரஜாபதி மதம்" என்ற பெயரிலான கிறீஸ்தவகுழு தேவிஸ்ட், முக்திஸ்ட், ஆகநிஸ்ட் என்ற மூன்று பிரிவில் கிறீஸ்தவ தேவாலயங்களின் உதவியில் இந்துமதத்தவர்களை மதம் மாற்றும் கும்பல்.
"பிராஜாபதி மதம்"என்ற பெயரில் தாங்களாகவே ஒன்றை கற்பித்து திரியும்
சில கிறீஸ்தவர்களே இவ்வாறு வேதத்தில் சில மேற்கோள்களை கையாண்ட தமது கருத்தை நிலைநாட்ட முயலுகின்றனர். தம் கொள்கைகேற்றவாரு
" ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ"போன்ற மந்திரங்களை கற்பித்து பிரசாரம் செய்கின்றனர். இம்மாதிரி மந்திரம் வேதத்தில் எங்குமே இல்லை.
ஐதரேய ப்ராஹ்மணத்தில் பிராஜபதியை தேவர்கள் பலியிட்ட விஷயம் வருகிறது. ப்ரஜாபதி தன் மகளையே மனைவியாக்க துணிந்தான். இதை தேவர்கள் தடுத்த போது அவன் அவற்றை புறக்கணித்தான். எனவே அவனுக்கு மரணத்தை வழங்க ஒரு ருத்ரனை படைத்தார்கள். அவன் ப்ரஜாபதியை அழித்தான்.
இந்த ப்ரஜாபதிதான் இயேசு என்றால் இயேசுக்கு மகள், மனைவி உண்டா? மகளை அவர் புணர நினைத்தாரா? இப்படி சரித்திரத்தில் உள்ளதா என்று வினாவினால் ப்ராஜாபதிகள் பலர். நாம் புருஷ ப்ரஜாபதியையே இயேசு என்கிறோம் என்று சாதிப்பர்.
அதே ப்ராஹ்மணத்தில் அடுத்த சில மந்திரங்களில் புருஷப்ராஜாபதி சில மனிதனை படைக்க பெண்ணிடத்தில் ரேதஸை விட அதன் அளவு அதிகமாக இருந்ததால் அப்பெண்ணால் அதை ஏற்கமுடியவில்லை. அது ஓடையாக விழுந்து அதிலிருந்து மனிதன் உண்டானான் என்கிறது.
   இந்த ப்ரஜாபதிதான் இயேசு என்றால் எப்பெண்ணிடம் வீர்யத்தை விட்டார்? எந்த மனிதன் அவ்வீர்யத்தில் உண்டானான்? இவையெல்லாம் நடந்தாலன்றோ யேசுகிறீஸ்து ப்ரஜாபதியாவார்.
   தங்கள் கடவுளான புருஷப்ரஜாபதி என்றதனால்தானோ புருஷ ஸூக்தத்தை மேற்கோள் காட்டுகின்றனர்! புருஷ ஸூக்தத்தில் வரும் ஆதிபுருஷனை கொண்ட வேள்வியில் பலியிடப்படும் யாகப்பசுக்களை ப்ரஜாபதியான இயேசு என கதை கட்டுகின்றனர்
  வேள்விகளில் யாகப்பசு யூகஸ்தம்பத்தில் கட்டப்பட்டு தர்ப்பை புல்லான கயிற்றால் கட்டப்பட்டு மூச்சு நிறுத்தபடுகின்றன. இவ்யூகஸ்தம்பத்தை சிலுவைஎன்றுவாதாடகின்றனர்.சாதாரணமாக ஒரு புலால் வியாபாரி கூட குறிப்பிட்ட விலங்கை கட்டி வைத்திருப்பான். அதனால் விலங்கு கட்டுமிடமெல்லாம் சிலுவையாகுமா? பொய்சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?
அடுத்ததாக யாகப்பசுவினை கட்டும் தர்ப்பை புல்லை முள்முடி என்கின்றனர். யாகப்பசு தர்ப்பைபுல்லால் கட்டப்பட்டு இறக்கின்றது என்றல்லவா ப்ரஹாமானங்கள் கூறுகின்றன. ஆனால் இயேசுவோ ஆணியால் அறையப்பட்டதாக அல்லவா கூறப்படுகின்றது. இந்த அரைவேகாட்டு மண்டுகள் யாகப்பசுவையும், இயேசுகிறீஸ்துவையும் ஒன்று என்று கூறுவதை சில பைத்தியங்கள் காது கொடுத்து கேட்பது கொடுமையிலும் கொடுமை
ஆகவே இயேசு கிறீஸ்து வேதத்தில் பரஜாபதி கூறப்படுகின்றார் என்ற அபத்த கருத்துக்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றிலும் இவர்கள் கூறும் எந்த விஷயமும் இல்லை. அறைகுறை மக்களை ஏமாற்றி மதம்மாற்றும் ஈன யுக்திதான் இது. எனவே இது போன்ற ஈனபுரட்டு வலையில் மக்கள் சிக்கிக்கொள்ள கூடாது.


கல்கியவதார விசாரம்

யுகயுகமாய் அவதரிக்கும் தெய்வமாம் விஷ்ணுவின் கல்கி அவதாரம் முஹம்மது நபி என்ற பாஷாண்டவாதத்திற்கு பதிலடியை
இப்பதிவில் காண்போம்.நேரடியாக விடயத்திற்கு வருவோம்..
சாகிர்நாயக் மற்றும் அவரின் அடிவருடிகள் முஹம்மது கல்கி பகவான் எற கூறும் ஆதாரங்கள், ஒற்றுமைகள், அக்கருத்தின் திரிபுதந்திரம், என்பவற்றை விசாரிப்போம்.

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

     
     📖 பகவத புராணம்:அத்தியாயம்12:ஸ்லோம் 18-20

🚫 கல்கியின் தந்தையின் பெயர் விஷ்ணுயாஸ்

🚫விஷ்ணுயாஸ் என்ற பெயரை மொழிபெயர்த்தா விஷ்ணுவை/கடவுளை வணங்குபவர் என அர்த்தமாம். நபிகள் நாயகத்தின் தந்தை பெயர் அப்துல்லாஹ்.
அதற்கு அர்த்தம் கடவுளை வழிபடுபவர் என பொருளாம். எனவே அப்துல்லாஹ்தான் விஷ்ணுயாஸராம்.

🚫கல்கியின் தாயார் பெயர் சுமதி

🚫சுமதி என்ற பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அமைதி எனும் பொருள் தருகிறது. முகம்மதுவின் தாயார் பெயரான ஆமீனாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அமைதி என்று பொருள் தருகிறதாம். அதனால் ஆமினாதான் சுமதியாம்.

🚫கல்கி சம்பாலா என்ற கிராமத்தில் பிறப்பார்.

🚫 சம்பாலா என்றால் அமைதியான இடம் என்று பொருளாம். மக்கா என்ற சொல் குறிப்பது பாதுகாப்பும், அமைதியும் நிறைந்த இடமாம். எனவே சம்பாலா என்ற கிராமமே மக்காவாகுமாம்.

🚫கல்கி ஊர்தலைவர் வீட்டில் பிறப்பார்.

🚫நபிகள் நாயகம் மக்காவின் தலைவர் வீட்டில் பிறந்தார்.அதனாலும் கல்கிதான் நபியாம்.

கல்கி புராணம் அத்தியாயம்2 ஸ்லோகம் 15.

🚫கல்கி மாதவ மாதத்தின் முதல்பாதியில் பன்னிரன்டாம் ஆம்நாள் பிறப்பார்

🚫நபி அவர்கள் சந்திரநாளின் குறிப்புபடி
ரபியுல் அவல் மாதத்தில் பன்னிரன்டாம்நாள் பிறந்தானாம். அதனால் கல்கிபகவான் நபியாம்.

🚫கல்கி பகவான் பரசுராமரிடமிருந்து ஞானம்பெறுவார்.அதுவும் ஒரு குகையில்.

🚫முகம்மது நபி நூர் என்ற மலையில் ஹூரா என்ற குகையில் இறைவனிடமிருந்து ஞானவெளிப்பாடு கிடைத்ததாம்

🚫மேலும் கல்கி பகவான் வடக்கு நோக்கி சென்று மீண்டும் வந்துவிடுவார்.

🚫நபி மக்காவிற்கு வடக்கே இருக்கும் மதினாக்கு சென்று மறுபடியும் மக்காக்கே வந்தானாம்.

🚫கல்கி பகவான்  எட்டு விஷேஷ குணங்களை கொண்டிருப்பார்.

🚫கல்கி, பகவத புராணத்தின்படி அவ் எட்டு குணாதியங்களாவன, ஞானம், சுயகட்டுபாடு, கன்னியமான வம்சாவழி, அசரீரியாக பெற்ற அறிவு, வீரம், தர்ம சிந்தனை, நன்றிபாராட்டும் தன்மை, அளவான பேச்சு போன்றன. இவையெல்லாம் நபிகள்நாயகத்திற்கு உண்டாம்

📖 கல்கி புராணம்:அத்தியாயம்2:ஸ்லோகம்5,

🚫கல்கி பகவானுக்கு வானவர்களால் ஒரு குதிரை வழங்கப்படும். அவர் கையில் வாளேந்தி குதிரையில் சவாரிசெய்வார். எதிரிகளை அவர் வீழ்த்துவார்.வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள். மார்கத்தை பரப்ப நான்கு தோழர்கள் உதவுவார்கள்.

🚫நபிக்கு 'புராக் 'என்ற வாகனம் கொடுக்கப்பட்டது. அதில் சவாரி செய்து வாளுடன் போரிட்டானாம். நபிக்கு அபூபக்கர்,உமர், உஸ்மான், அலி என்ற நான்கு தோழர்கள் உதவி செய்தனர்

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

இனி சாகிரின் வார்த்தை ஜாலங்களையும் அதன்மூலம் அவன் உருவாக்கிய மாயைகளையும் அலசுவோம்.

📖பாகவத புராணம்:அத்தியாயம்12:ஸ்லோகம்18-2

ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன: பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி

சம்பல கிராமத்தில் முக்கியமான பிராமணரும் மகாத்மாவுமான விஷ்ணுயாஸரின் வீட்டில் கல்கி பிறப்பார்.

 உலகத்தில் எந்தவொரு அறிவாளியாவது பெயரை மொழிபெயர்த்து இருவரை ஒப்பிடுவானா? இது அறிவுக்கு பொருத்தமானதா?  "அவரை போல் இவர்" என்று இருவரை ஒப்பிட்டால் கூட பெயரை மொழிபெயர்ப்பது பொருந்தாது. ஆனால் "அவர்தான் இவர் " என அடித்துகூறினால் அனைத்துமே பொருந்தவேண்டும்.ஒன்று முரண்பட்டால்கூட இருவரும் வேறென்பது தெளிவாகிவிடும்.  புராணத்தில் தெளிவாக பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்போது இவர் ஏன் அவசியமே இல்லாமல் மொழிபெயர்க்கவேண்டும்?

மற்றும் இங்கு விஷ்ணு என்றால் கடவுள் என்றுபொருள் கொடுத்துள்ளான். "அல்லாஹ்" என்ற சொல்லின் பொருள் கடவுளின் பெயரை குறிப்பதல்ல. "கடவுள்" என்ற பொருளை தருவது. ஆக இப்படி சொல்லை பயன்படுத்தினால்தானே அவன் நினைத்தது நிறைவேறும்.
விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்தவர் என்று பொருள். இதையேதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் முதல் ஸ்லோகம் விளக்குகிறது. ஆக இங்கு விஷ்ணுயாஸருக்கும் அப்துல்லாஹ் என்ற பெயருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

'முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன: பவனே விஷ்னுயஸஸ'

முக்கியமான பிராமணரான மகாத்மாவான விஷ்ணுயாஸர் வீட்டில் கல்கி அவதரிப்பார். அதாவது தனது தந்தையின் வீட்டிலேயே கல்கி பிறப்பார்.

ஆனால் சாகிரோ நூதனமாக சொல்லை கையாண்டு தந்தையின் வீட்டில் பிறப்பதை மறைத்து ஊர்தலைவர் என மாற்றி தனக்கு சாதகமாக திரித்துள்ளான்
என தெளிவாக புரியும்.

கல்கி புராணம்:காண்டம்1:அத்தியாயம் 2 :ஸ்லோகம்15

த்வாதஸ்யாம் சுக்ல பக்ஷஸ்ய
        மாதவே மாஸி மாதவம்
    ஜாதம் தத்த்ருசது: புத்ரம்
        பிதரௌ ஹ்ருஷ்ட மாநஸௌ

மாதவ மாதத்தின் சுக்ல பக்ஷ துவாதசியில் பன்னிரெண்டாம் நாள் பகவான் விஷ்ணு கல்கியாக ஜனனம் செய்வார். அந்த புத்திரனை கண்டு பிதாவான விஷ்ணுயாஸரும் தாயான சுமதியும் மனம் நிறைந்து மகிழ்வார்கள்.

இந்த ஸ்லோகத்தின் படி கல்கிபகவான் மாதவமாதத்தில் சுக்ல பக்ஷ துவாதசியில் பன்னிரெண்டாம் நாள் அவதரிப்பார் என கொள்ளமுடியும். ஆனால் இந்த இடத்தில் மாபெரும் சதி செய்துள்ளான் சாஹிர் நாயக். மாதவ மாதம் என்பது வைகாசிமாதத்தை குறிப்பதாகும்.அதாவது ஒருவருடத்தின் ஐந்தாவது மாதம்.  முஹம்மது நபி பிறந்ததோ ரபி உல் அவ்வல் மாதத்தில்.அதாவது இஸ்லாமிய நாட்காட்டியின் படி  வருடத்தில் மூன்றாவது மாதத்திலாகும்.

மற்றும் இச்சுலோகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் கல்கி பகவான் பிறக்கும்போது அவரின் தந்தை உயிருடன்தான் உள்ளார். ஆனால் முஹம்மது நபி பிறப்பதற்கு முதலே அவனின் தந்தை இறந்துவிட்டார். ஆக இந்த சான்றும் முற்றிலுமாக தவறானது என்பது புலப்படுகிறது.
அடுத்தாக முஹம்மதின் ஞான வெளிப்பாடு பற்றி நோக்குவோமாயின் சாஹிரின் கோமாளிதனத்தை அறியலாம்.

கல்கிபுராணம்:காண்டம் 1:அத்யாயம் 3:ஸ்லோகம்1

      'சூத உவாஸ ;ததோ வஸ்தம்
              குருகுலே யத்வம் கல்கிம்
        நிருக்ஸய சுஹ மஹேந்திர
               பர்வத ஸ்டித் இதோ ராம
        சாமான்ய ஆஸ்ரமம் பிரபோ'

சூத முனிவர் கூறுகிறார்:கல்கிபகவான் குருகுல கல்வியை கற்கவேண்டியது உள்ளது. அதனால் கல்கியை குருகுல கல்விக்காக சக்தி வாய்ந்த நீண்டஆயுள் கொண்ட பரசுராமர் வாழும் மஹேந்திர மலைக்கு அழைத்து செல்லுங்கள்.

அதாவது கல்கிபகவான் மனித அவதாரமாக ஜனிப்பதால்
அதனைபூரணத்துவ படுத்த குருகுலகல்வியை கற்கவேண்டும்.
அதற்காக அவரின் அம்சமான பரசுராமரிடமே கல்வி பயில்கிறார். அதுவும் மஹேந்திர பர்வதத்தில் இதே போல் முஹம்மதுக்கு அல்லாஹ் வந்து கல்வி பயின்று தந்தாரா?

கல்கி பகவானிற்குரிய விஷேஷ அட்ட குணங்களாக ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ், செளசீல்யம், வாத்சல்யம் திகழ்கிறது. இவற்றுள் ஒரு, சிலவே ஒத்துபோகின்றன. மற்ற அனைத்தும் முரணானது என்பதால் தாமாகவே சில குணங்களை இயற்றி தனது வாதத்திற்கு பலம் சேர்த்துள்ளான்.

கல்கி புராணம்:காண்டம்1:அத்தியாயம்2
:ஸ்லோகம்5

'கட்யூர் பஹ்ஹிர் பரத்ர பஹ்ஹிர் தேவா;கரிஷ்யாமி கலிக்சவம் பவந்தோ,
    பந்தவா தேவ்;ஸ்வம்சேன அவதாரிஸ்வதா'

என் இவ்வவதார நோக்கம் பொல்லாத இக் கலியுகத்தை அகற்றுவதாக இருக்கும்;அதற்கு உறுதுணையாக என்அம்சம் பொருந்திய
மூன்று சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர்.அதர்மத்தை அழித்து உங்களை காப்பாற்றவே நான் இவ்வவதாரத்தை எடுத்தேன்.

இச்சுலோகத்தின் படி கல்கிக்கு மூன்று சஹோதரர்கள் துணையாக நிற்பர். ஆனால் முஹம்மதுக்கோ உடன்பிறந்தோர் யாருமில்லை.  ஆகவே சகோதரர்களை நண்பர் என திரித்து தனது கருத்தை மெய்பிக்க முயன்றுள்ளான்.

மற்றும் இங்கு இன்னொரு கோமாளிகூத்து என்னவெனில் முஹம்மது 'புராக்'என்ற  குதிரையில் சவாரி செய்தாராம், கல்கிபகவானும் குதிரையில் போர் செய்வாராம் ஆகையால் இருவரும் ஒன்றாம் . உலகில் 99சதவீதமான போர்வீரர்கள் பயணிப்பது குதிரைகளில்தானே? உப்பு சப்பில்லாத கருத்துக்களை திணித்தால்கூட விபரம்தெரியாத இந்துக்கள் தலையை ஆட்டுவார்கள் என்ற எண்ணத்தில்தான் இப்படி குருட்டுதனமாக ஒரு கதையை உருவாக்கியுள்ளான்.

ஆகஇதுவரைநாம்பார்த்தவற்றில் சாகிரின் புரட்டு வாதத்திற்கு பலம்சேர்க்க அவன் வைத்த அனைத்து சான்றுகளுமே ஒன்றொக்கொன்று முரணானதாக உள்ளது. சாகிர் அமைத்த இக்கற்பனை கோட்டையின் அஸ்திவாரமே ஆட்டம் காணுகையில் அதற்கு மேல் அடிமேல் அடியாய் நபிக்கும் கல்கிபகவானுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்யாசங்களை காண்போம்.

கல்கிபுராணம்:காண்டம்1:அத்யாயம் 2

ஸ்லோகம் 31ன்படி  கல்கிபகவானுக்கு கவி,பிராக்ஞன், ஸுமந்தரன் என்று மூன்று  சகோதரர்கள் இருப்பார்கள் ஆனால் நபிக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.

கல்கி புராணம்:காண்டம் 1:அத்யாயம் 2 ஸ்லோகம் 16ன்படி கல்கிபகவான் பிறக்கும்போது ஒரு தாதியாக
ஷஷ்டி எனும் தேவி நாபிக்கொடியை அறுப்பாள், சிவன் தன் சிரம்தாழ்த்தி வணங்க கங்காதேவி ஸ்னானம் செய்விப்பார். ஸாவித்ரி தேவி உடலை சுத்தம் செய்தார். பூமாதேவி முதல்முறையாக பால்கொடுப்பார். வாயுதேவன் செய்த விக்ஞாபத்திற்கேற்ப தன் நான்குகரங்களை மறைத்து சாதாரண குழந்தையாக மாறுவார்.
இவற்றில் ஒன்றேனும் முஹம்மது நபியின் பிறப்பில் நிகழவில்லை

கல்கி புராணம் காண்டம்1:அத்யாயம்:6ன்படி கல்கிபகவான் பத்மாவதிக்கு
தனது கிளியை தூதாக விடுகிறார். இப்படி நபி எந்த மனைவிக்கு கிளியை தூது விடுகிறார்

  கல்கிபுராணம்:காண்டம்2:அத்யாயம்3ன்படி கல்கிபகவான் சிம்ஹல தீபத்தை சேர்ந்த பத்மாவதிதேவியை திருமணம் செய்து ஏகபத்தினி விரதனாய் திகழ்வார். நபியோ பதினொரு பெண்களை மணந்தான். அவர்களுள் யாருமே சிம்ஹலதீபத்தில் பிறக்கவில்லையே.

அத்தோடு சீக்கிய மதநூலான கிரந்த சாகிபு என்ற நூலில் பரமபுருஷனான கல்கியின் முதல்போர் சீனாவுடன் தான் என்றும், ஜின் என்று சொல்லப்படுகின்ற பௌத்தர்களையும்,  நிரீச்வரவாதிகளையும், தன்னை எதிர்த்து வரும் பல லக்ஷம் பைசாச மத (பிசாசு மதத்தவர்-இஸ்லாமிய) துஷ்டர்களையும், முகம்மதியர்களையும் கொன்றொழிப்பார்.
என்றும் சொல்லப்படுகிறது.
இதையே கல்கிபுராணமும்கூறுகிறது.

 
இவ்விஷயம் முகம்மதுநபி விஷயத்தில் எவ்விதம் பொருந்தும்?முகம்மது நபி தான் வாழ்நாளில் பௌத்தர்களையோ, முகம்மதியார்களையோ, பல லக்ஷம் மனிதர்களையோ கொன்றொழித்ததாக எங்குமே பதிவுசெய்யபடவில்லைை.

இதுபோன்று ஒன்றல்ல, இரண்டல்ல முஹம்மது நபி கல்கிபகவானல்ல என்பதற்கு பல ஆதாரங்களை வைக்கமுடியும். மாட்டை உண்ணும் பைசாச தர்மஸ்தாபகனை சர்வல்லமை படைத்த அனைத்திற்கும் ஆதாரமான விஷ்ணுபவவானின் அவதாரமாக சொல்வது இழிவிலும் இழிவன்றோ.

இனிமேலாவது பொய்யிலே ஊறிப்போன முட்டாள் சாகிர்நாயக்கின் அடிவருடிகளான இஸ்லாமியர்கள் யாராவது முஹம்மதாசூரனை கல்கிபகவானோடு ஒப்பிட்டால் இந்த ஆதாரங்களை தூக்கி வீசி எறியுங்கள். நவதுவாரங்களையும் அடைத்துகொள்வார்கள்.

சரபேஸ்வர இடம்ப திக்காரம்

தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று வழங்கப்படும் ஆதிகாலத்தில் பாரததேச மக்கள் வேதமார்க்கத்தினின்றும் முறைதவறாமலிருந்தனர். அக்காலத்த...